செய்திகள்

பராமரிப்பு பணி - மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

Published On 2018-07-28 03:37 GMT   |   Update On 2018-07-28 03:37 GMT
கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #Electrictrain
சென்னை:

கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு, மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 8.15, 9.30 மணி மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை காலை 8.35 மணி ரெயில் மீஞ்சூர்-சூலூர்ப்பேட்டை இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 9 மணி ரெயில் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-அரக்கோணம் அதிகாலை 1.20 மணி ரெயில் வில்லிவாக்கம்-பட்டாபிராம் இடையே உள்ள ரெயில் நிலையங்களில் நாளையும், நாளை மறுநாளும் நிற்காது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #Electrictrain
Tags:    

Similar News