செய்திகள்

வெள்ளகோவில் அருகே குடும்ப தகராறில் தூக்கு போட்டு ஆசிரியை தற்கொலை

Published On 2018-07-27 10:28 GMT   |   Update On 2018-07-27 10:28 GMT
வெள்ளகோவில் அருகே குடும்ப தகராறில் தூக்கு போட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicidecase
முத்தூர்:

வெள்ளகோவில் கச்சேரி வீதியை சேர்ந்தவர் கோபி (வயது 31). கர்நாடக மாநிலத்தில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (22). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும் இதனால் சிவரஞ்சனி வேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

15 நாட்களாக வேலைக்கும் போகவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிவரஞ்சனி தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி சிவரஞ்சனியின் உடல் மீட்கப்பட்டது.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News