செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை - பவானிசாகர் அணை 96 அடியை தொட்டது

Published On 2018-07-26 05:17 GMT   |   Update On 2018-07-26 05:20 GMT
நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 96 அடியை எட்டியது.
ஈரோடு:

தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டியதையொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 45 அடியிலிருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 8 ஆண்டுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது.

இந்த நிலையில் பருவ மழை தணிந்து மழை குறைந்தது. இதனால் நீர்வரத்தும் குறைந்தது. நேற்று மாலை முதல் நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப் பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

நேற்று அணைக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று அதிகாலையில் இருந்து இது மேலும் அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 869 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.13 அடியாக இருந்தது.

அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tags:    

Similar News