செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது

Published On 2018-07-25 16:29 GMT   |   Update On 2018-07-25 16:29 GMT
சேலத்தில் பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொண்டலாம்பட்டி:

சேலம், தேக்கம்பட்டி பகுதியை சேந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். 

புகாரின் பேரில் பேலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் கடத்தியது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, அந்த வாலிபரை கைது செய்தனர். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News