செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் புதிய பாலம் கட்டும் பணியினை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

Published On 2018-07-25 11:10 GMT   |   Update On 2018-07-25 11:10 GMT
ஜெயங்கொண்டத்தில் ரூ.72 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டும் பணியினை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். #Bridge

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கழுவந் தோண்டி, தேவாமங்கலம் பெரிய வளையம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இந்த பாலத்தை அப்பகுதி பொது மக்கள், விவசாயிகள் பயன் பெறும் வகையில் இடிந்த பாலத்தை சீரமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. புதிய பாலம் கட்டும் பணி தற்பொழுது 71.80 லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கிராமங்களை இணைக்கும்வகையிலும் தார் சாலைகளும் அமைக்கப்படுகிறது. பாலம் கட்டும் பணி விரைவாக நடக்கின்றதா? உறுதியான முறையில் பாலம் கட்டப்படுகிறதா? என்பதை எம்எல்ஏ. ராமஜெயலிங்கம் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பணியினை விரைவாகவும், பாலத்தினை உறுதியாகவும் இருக்க வேண்டும் எனவும், மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பாலம் கட்டும் பணியை முடித்து விட வேண்டும் என அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது பொதுப் பணித்துறை பொறியாளர் விஜயன் மற்றும் ஒப்பந்தகாரர் மற்றும் நகர செயலாளர் செல்வராஜ் மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சைமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் மாவட்ட அம்மா பேரவை மனோகரன், அண்ணா தொழிற் சங்க மாவட்ட இணை செயலாளர் ஜெயசங்கர் முன்னாள் கவுன்சிலர்கள் மூர்த்தி, சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் ஜமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News