செய்திகள்

பாணாவரம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2018-07-24 21:21 IST   |   Update On 2018-07-24 21:21:00 IST
பாணாவரம் அருகே மோட்டார்சைக்கிள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். #MotorcycleAccident
பனப்பாக்கம்:

காவேரிப்பாக்கத்தை அடுத்த மாகாணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 65), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 21-ந் தேதி பாணாவரத்தை அடுத்த பன்னியூர் அருகே வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் வேலு ஓட்டிச்சென்ற சைக்கிள்மீது மோதியது. இதில் வேலு படுகாயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையிலும் பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
Tags:    

Similar News