செய்திகள்

புதுவையில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தூக்கில் தொங்கினார்

Published On 2018-07-23 16:03 IST   |   Update On 2018-07-23 16:03:00 IST
கணவர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை வினோபா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு (வயது44). இவர் தனியார் லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (30) இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்குமார் (12)என்ற மகனும், ஹனிஷ்கா (10) என்ற மகளும் உள்ளனர்.

லட்சுமி கணவரிடம் சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா அழைத்து செல்லுமாறு கூறினார். அதற்கு ரகு மறுத்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மகாலட்சுமி கணவரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அதற்கு ரகு ஒருநாள் வேலைக்கு செல்லாமல் இருந்தால் கூட குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக உள்ளது என்று கூறினார்.

இந்த நிலையில் கணவர் வீட்டு வாரண்டாவில் தூங்கினார். குழந்தைகளும் விளையாட சென்று விட்டனர். மகாலட்சுமி வீட்டில் உள்ள அறைக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து ரகு அறைக்கதவை தட்டினார் ஆனால் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவி மகாலட்சுமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News