செய்திகள்

மதுராந்தகம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் மறியல்

Published On 2018-07-22 15:18 IST   |   Update On 2018-07-22 15:18:00 IST
மதுராந்தகம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #waterproblem

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள தண்டரைபேட்டை கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிஅடைந்தனர்.

இதுபற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை அரசு பஸ்சை சிறை பிடித்து காலி குடங்களுடன் தண்டரைப்பேட்டை- மதுராந்தகம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் மதுராந்தகம போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #waterproblem

Tags:    

Similar News