செய்திகள்

பண்ருட்டி அருகே குளத்தில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

Published On 2018-07-21 15:39 IST   |   Update On 2018-07-21 15:39:00 IST
பண்ருட்டி அருகே குளத்தில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயி. இவரது மகன் ஹரிஷ் (வயது 8).

இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டின் அருகே உள்ள குளத்துக்கு குளிக்க சென்றான்.

அப்போது கால் தவறி குளத்துக்குள் விழுந்து இறந்து விட்டான். குளிக்க சென்ற மகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் கவலை அடைந்த பெற்றோர் குளக்கரைக்கு தேடிச் சென்றனர்.

அங்கு ஹரிஷ் அணிந்திருந்த செருப்பு கிடந்தது. உடனே குளத்தை எட்டிப் பார்த்தனர். அங்கு ஹரிஷ் பிணமாக கிடந்தான். இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவன் ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News