செய்திகள்

வேட்டவலத்தில் கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

Published On 2018-07-18 10:23 GMT   |   Update On 2018-07-18 10:23 GMT
வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
வேட்டவலம்:

வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சின்னதாயி இவர்களுக்கு சொந்தமான பசுமாடு நேற்று இரவு கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்து கொண்டு வேகமாக ஓடியது.

அப்போது அங்குள்ள சுமார் 50 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது.

காலையில் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் வேட்டவலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்த பசுமாட்டை சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர்.
Tags:    

Similar News