செய்திகள்

ரஷிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வெட்க கேடானது- நீதிபதி வேதனை

Published On 2018-07-18 10:19 GMT   |   Update On 2018-07-18 10:19 GMT
திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த ரஷிய பெண்ணிற்கு நடந்த சம்பவம் தமிழக மக்கள் வெட்கப்படவேண்டிய வி‌ஷம் என்று மாவட்ட நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் நேற்று மாலை மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட ரஷிய பெண்ணை பார்த்தனர்.

மேலும் அவர்கள் அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஷிய இளம்பெண் இன்னும் சுயநினைவின்றி காணப்படுகிறார். அவருக்கு ரஷிய மொழியை தவிர வேறு மொழி பேச தெரியவில்லை. ரஷிய மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் அந்த பெண்ணிடம் பேசி விசாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த ரஷிய பெண்ணிற்கு நடந்த இந்த சம்பவம் தமிழக மக்கள் வெட்கப்படவேண்டிய வி‌ஷயமாகும். வெளிநாட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து தங்கி உள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு வலுப்படுத்த மாவட்ட காவல் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News