செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 பேர் கைது

Published On 2018-07-18 09:47 GMT   |   Update On 2018-07-18 09:47 GMT
நெல்லிக்குப்பம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் கடைவீதி பகுதியில் 3 பேர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பி.என். பாளையத்தை சேர்ந்த அன்பு (வயது 32), தினேஷ் (வயது 26), சத்தியராஜ் (வயது 22) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News