செய்திகள்

சேலத்தில் மாநில நுழைவு கட்டணம் செலுத்தாத ஆம்னி பஸ் பறிமுதல்

Published On 2018-07-16 11:56 GMT   |   Update On 2018-07-16 11:56 GMT
சேலத்தில் மாநில நுழைவு கட்டணம் செலுத்தாத ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்:

சேலம் மேற்கு ஆர்.டி.ஓ. தாமோதரன் தலைமையில் ஓமலூர் டோல்கேட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்த போது மாநில நுழைவு கட்டணம் செலுத்தாமல் அந்த பஸ் இயக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து 3 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அந்த பஸ்சையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News