செய்திகள்

மானாமதுரையில் மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்: ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீது வழக்கு

Published On 2018-07-16 16:55 IST   |   Update On 2018-07-16 16:55:00 IST
கண்மாயில் மணல் திருடிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். டிராக்டர் உரிமையாளரான ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மானாமதுரை:

மானாமதுரை கண்மாய் பகுதியில் சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வருவாய் ஆய்வாளர் அருள்ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து மற்றும் பணியாளர்கள் கண்மாய் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு டிராக்டரில் சிலர் மணல் எடுத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் அதிகாரிகளை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

வருவாய்த்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து மானாமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த டிராக்டர் கீழமேல்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சோனைதேவன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News