செய்திகள்

துறையூர் வாகன சோதனையில் நகை கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர்

Published On 2018-07-14 14:33 GMT   |   Update On 2018-07-14 14:33 GMT
துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டாணா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகை கொள்ளையர்கள் 2 பேரை பிடித்தனர்.
துறையூர்:

துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டாணா அருகில் துறையூர் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத கார்ஒன்று வந்தது. அதை மடக்கி விசாரனை செய்த போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரனாக பேசினர். இதனால் சந்தேகமடைந்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் அவர்கள் தூத்துகுடி மாவட்டம் குலையன் கரைசலை சேர்ந்த தனசேகரபாண்டியன்(34) மற்றும் பட்டறை சுரேஷ் என்பவரின் மனைவி தனம் பூங்கொடி(28) என்பது தெரிந்தது.

அவர்களை விசாரித்ததில் கடந்த மாதம் துறையூர் சாமிநாதன் நகரில் மெடிக்கல் உரிமையாளர் பாபு என்பவர் வீட்டில் 40 பவுன் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் விசாரனை செய்ததில் முதல் கட்டமாக 8 பவுன் மற்றும் காரை போலீசார் கைபற்றி குற்றவாளிகள் இருவரையும் துறையூர் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். 

முக்கிய குற்றவாளியான பட்டறை சுரேஷ் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடித்தால்தான் மற்ற நகைகளை கைப்பற்றமுடியும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News