செய்திகள்

பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

Published On 2018-07-12 08:59 GMT   |   Update On 2018-07-12 09:01 GMT
பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் நசிருதீன் கடலில் மூழ்கி பலியானார். முகமதுஅலி, அஷ்ரப்அலி, சாகுல்அமீது ஆகியோரை மற்ற மீனவர்கள் மீட்டனர்.
பொன்னேரி:

பழவேற்காடு அடுத்த கோட்டை குப்பம், ஜமிலா பாத்தை சேர்ந்தவர் நசிருதீன் (32). இன்று அதிகாலை அவர் அதே பகுதியை சேர்ந்த முகமது அலி, அஷ்ரப், சாகுல் அமீது ஆகியோருடன் படகில் பழவேற்காடு கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார்.

முகத்துவாரம் பகுதியில் கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. இதில் நசிருதீன் கடலில் மூழ்கி பலியானார். முகமதுஅலி, அஷ்ரப்அலி, சாகுல்அமீது ஆகியோரை மற்ற மீனவர்கள் மீட்டனர்.

Tags:    

Similar News