செய்திகள்

பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பொமக்களிடம் கருத்து கேட்க அன்புமணிக்கு அனுமதி- ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-07-10 11:30 GMT   |   Update On 2018-07-10 11:30 GMT
பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க டாக்டர் அன்புமணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கான நில ஆர்ஜித பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எதிர்ப்பையும் மீறி பல்வேறு பகுதிகளில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது.

இந்நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவரும் தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்தித்து அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். சில இடங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்ற நிலையில், தர்மபுரி தொகுதியில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.


இதை எதிர்த்து பாமக துணை பொது செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, அன்புமணி ராமதாஸ் தலைமையில் தர்மபுரியில் பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. #GreenExpressway #AnbumaniFeedbackMeeting 
Tags:    

Similar News