செய்திகள்

பூந்தமல்லி-ஆவடி ரோட்டை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த வீடு-கடைகளை இடிக்க முடிவு

Published On 2018-07-08 10:19 GMT   |   Update On 2018-07-08 10:19 GMT
சென்னை மவுண்ட்- பூந்தமல்லி, ஆவடி சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த வீடு மற்றும் கடைகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மவுண்ட்- பூந்தமல்லி, ஆவடி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

இந்த சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இதன்படி 6 வழிப்பாதையாக அகலப்படுத்துவதற்கு தனியார் பட்டா நிலங்களை நில ஆர்ஜிதம் செய்திட மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி காட்டுப்பாக்கம் பகுதியில் ரோட்டை ஒட்டிய கடைகள், வீடுகள், காலியிடங்களை அரசு கையகப்படுத்த உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்டோரது வீடு, கடைகள், திருமண மண்டபம், கோவில்கள் இடிக்கப்பட உள்ளது.

இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க விரும்புபவர்கள் 30 நாட்களுக்குள் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுக்கப்படும் விளக்கங்கள் அதிகாரிகளால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆட்சேபனைதாரர்கள் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் ஆகஸ்டு 17-ந்தேதி டி.ஆர்.ஓ. முன்னிலையில் ஆஜராகியும் விளக்கம் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News