செய்திகள்
காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

மீஞ்சூர் ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட ஊழியர்கள்

Published On 2018-07-04 09:38 GMT   |   Update On 2018-07-04 09:45 GMT
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர் ஊராட்சி அலுவலகத்துக்கு ஊழியர்கள் பூட்டு போட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், பதிவுத் துறை எழுத்தாளர்களுக்கு வழங்கும் இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் போராட்டங்கள் நடத்தினர்.

அவர்கள் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News