செய்திகள்

சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே சிறப்பு கட்டண ரெயில்

Published On 2018-06-27 22:12 GMT   |   Update On 2018-06-27 22:12 GMT
சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே சிறப்பு கட்டண ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 28-ந் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில்(வ.எண்.06011) எழும்பூரில் இருந்து அடுத்த மாதம்(ஜூலை) 2-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக, செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06012), செங்கோட்டையில் இருந்து அடுத்த மாதம் 3-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 28-ந் தேதி(இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News