செய்திகள்

மன்னார்குடி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவர் மரணம்

Published On 2018-06-24 15:22 GMT   |   Update On 2018-06-24 15:22 GMT
மன்னார்குடி அருகே மாங்காய் பறிக்கும் ஆசையில் மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே உள்ள பருத்தி கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுந்தரரேசன் (வயது 10). இவர் அதே பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி இடைவேளை நேரத்தில் பள்ளி வளாகத்தில் நின்ற சுந்தரேசன் அங்கு மாமரத்தில் மாங்காய் காய்த்து தொங்குவதை கண்டதும் அதை சாப்பிட ஆசை பட்டார்.

இதைத்தொடர்ந்து மரத்தின் கிளை ஏறி மாங்காய்பறித்த சுந்தரேசன் கால் தவறி கீழே விழுந்தார். சுமார் 10 அடி உயரத்தில் இருந்து விழுந்த அந்த மாணவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆசிரியர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாங்காய் ஆசை மாணவர் உயிரை பறித்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News