செய்திகள்

திருப்புல்லாணி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2018-06-22 16:19 IST   |   Update On 2018-06-22 16:19:00 IST
திருப்புல்லாணி அருகே திருமணத்துக்கு யாரும் பெண் கொடுக்காததால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள மொட்டையன் வலசையை சேர்ந்தவர் சித்திரவேலு. இவரது மகன் ரஞ்சித் (வயது 23). வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த இவர் திருமணத்துக்கு பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார்.

ரஞ்சித்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பெண் பார்ப்பதில் சிக்கல் இருந்தது.

திருமணத்துக்கு யாரும் பெண் தராததால் கடந்த ஒரு வாரமாகவே ரஞ்சித் விரக்தியுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பெறுப்பு) யமுனா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News