செய்திகள்
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஆயுள் தண்டனை கைதி பலி
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
ராயபுரம்:
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (65) என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். இவர் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
கடந்த சில மாதமாக அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அவரது உடலை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். 2 சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை நேற்றிரவு மோசமானது. இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் உயிர் இழந்தார்.
இதுபற்றி புழல் சிறை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (65) என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். இவர் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
கடந்த சில மாதமாக அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அவரது உடலை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். 2 சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை நேற்றிரவு மோசமானது. இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் உயிர் இழந்தார்.
இதுபற்றி புழல் சிறை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.