செய்திகள்

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - தமிழக அரசுக்கு 5 நிபந்தனைகள்

Published On 2018-06-20 08:12 GMT   |   Update On 2018-06-20 08:12 GMT
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிடம் 5 திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி நிபந்தனை விதித்துள்ளது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur
சென்னை:

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிடம் விதித்துள்ள 5 நிபந்தனைகள் விவரம் வருமாறு:-

1. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் 4 வழிச்சாலை அமைத்து, அந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்.

2. 20 மெகாவாட் மின் வசதியை 2 வழித்தடங்கள் மூலம் செய்ய வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

3. போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

4. தோப்பூர் பகுதியில் 300 ஏக்கர் நிலத்தையும், டிரான்ஸ்பார்மர்களையும் தாமதமின்றி கையகப்படுத்தி ஒப்படைக்க வேண்டும்.

5. எண்ணெய் குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். எய்ம்ஸ் வழியாக ஐ.ஓ.சி. எண்ணெய்க் குழாய் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur

Tags:    

Similar News