செய்திகள்

சிதம்பரம் அருகே விபத்து- அதிகாரி உள்பட 2 பேர் பலி

Published On 2018-06-19 10:25 GMT   |   Update On 2018-06-19 10:25 GMT
சிதம்பரம் அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அதிகாரி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்:

கடலூர் அருகே உள்ள சிந்தாமணி குப்பத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 41). இவர் சிதம்பரம் அருகே முட்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வேலையை முடித்துவிட்டு சிந்தாமணி குப்பத்துக்கு செல்வதற்காக அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சிதம்பரம் அருகே பெரியப்பட்டு பகுதியில் கடலூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அவரது பின்னால் கடலூர் சிப்காட்டில் மத்திய சேமிப்பு கிடங்கில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த சேடப்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (36) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் இவர்களின் மோட்டார் சைக்கிளின் எதிரே கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக பலராமன் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலராமன் மற்றும் தமிழ்செல்வன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து புதுசத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
Tags:    

Similar News