செய்திகள்

தமிழக மீனவர்கள் 9 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு - கடலோர காவல்படை மீட்டது

Published On 2018-06-19 06:38 GMT   |   Update On 2018-06-19 07:42 GMT
மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 9 பேரை கடலோர காவல் படை விரைந்து சென்று மீட்டது. #TNFishermen #FishermenStranded #CoastGaurd
சென்னை:

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர், விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது நடுக்கடலில் படகு பழுதடைந்தது. என்ஜின் அறையில் அதிக அளவு கடல் நீர் புகுந்ததால் மேற்கொண்டு படகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றி கடலோர காவல் படைக்கு இன்று அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களை மீட்பதற்காக விரைந்தனர்.



சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் தமிழக மீனவர்கள் தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கடலோர காவல் படையினர் மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். #TNFishermen #FishermenStranded #CoastGaurd
Tags:    

Similar News