செய்திகள்

வேலூர் அருகே தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் மினி லாரி கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

Published On 2018-06-16 16:50 GMT   |   Update On 2018-06-16 17:00 GMT
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்

வேலூர்:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள குப்பம் பகுதியில் இருந்து தமிழகத்துக்கு மினி லாரி ஒன்று மாங்காய் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது. குப்பம் அருகே உள்ள தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கங்குந்தி வனப்பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் பயணித்த 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Tags:    

Similar News