வால்பாறையில் சிறுத்தை தாக்கி பெண் படுகாயம்
வால்பாறை:
வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் முதல்பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் மாதவி(35). தொழிலாளி.
இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டின் பின்புறம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் உள்ள புதருக்குள் இருந்த வந்த சிறுத்தை மாதவி மீது பாய்ந்து அவரது தலைப் பகுதியை கடித்து தாக்கியது.
இதனை பார்த்த மாதவியின் மகன் நித்தீஷ்(4) சத்தம் போட்டான். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் சிறுத்தையை விரட்டினார்கள். பின்னர் மாதவியை மீட்டு டேன்டீ எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.தலையில் பலத்த காயம் என்பதால் அங்கும் சிகிச்சையளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
டேன்டீ நிர்வாகத்திற் குட்பட்ட சிங்கோனா பகுதியில் ஓரே மாதத்தில் 3-வது முறையாக சிறுத்தை நடைபெற்றுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். .டேன்டீ நிர்வாகமும் வனத்துறையினரும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.