புழல் ஜெயிலில் வெளிநாட்டு கைதிகள் மோதல்: 2 பேர் காயம்
செங்குன்றம்:
புழல் ஜெயிலில் போலி பாஸ்போர்ட், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டு கைதிகள் 20-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். போர்ச்சுக்கலை சேர்ந்த டோமிகோய், தயான் மற்றும் துருக்கியை சேர்ந்த மகிர் தெர்வம் ஆகியோர் போலி பாஸ்போர்ட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.
இன்று காலை கைதிகள் அனைவரும் உணவு வாங்குவதற்காக வரிசையில் நின்றனர். அப்போது மகிர் தெர்வத்துக்கும், டோமிகோய், தயாள் ஆகியோருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த மகிர்தெர்வம் அருகில் கிடந்த கல்லால் டோமிகோய், தயாளை தாக்கினார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் அவர்களை விலக்கி விட்டனர். மோதலில் பலத்த காயம் அடைந்த கைதிகள் 2 பேருக்கும் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. கைதிகள் மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.