செய்திகள்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் 68 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
சென்னை:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந் தேதி, சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற (25.2.2018 அன்றைய தேதி அடிப்படையில்) 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்பட உள்ளனர். அதன்படி புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும், இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந் தேதி, சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற (25.2.2018 அன்றைய தேதி அடிப்படையில்) 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்பட உள்ளனர். அதன்படி புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும், இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.