செய்திகள்
ஆத்தூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள முக்காணியை சேர்ந்தவர் மலையாண்டி (வயது 52), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள மலையாண்டி அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த மலையாண்டி கடந்த 29-ந் தேதி விஷம் குடித்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.