செய்திகள்

புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு காரில் சாராயம் கடத்தியவர் கைது

Published On 2018-06-11 15:50 IST   |   Update On 2018-06-11 15:50:00 IST
புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு காரில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பம்:

பாகூர் அருகே ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது50). புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தும் தொழில் செய்து வந்த இவர் ஏற்கனவே 2 முறை காரில் சாராயம் கடத்தி கடலூர் கலால் பிரிவு போலீஸ் பிரபுவை கைது செய்து இருந்தனர்.

இந்த நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிரபு மீண்டும் புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்துவதாக கடலூர் கலால் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கலால் போலீசார் ரகசியமாக பிரபுவை கண்காணித்து வந்தனர்.

இன்றுகாலை பிரபு ஒரு காரில் அபிஷேகப்பாக்கத்தில் இருந்து டி.என்.பாளையம் வழியாக சாராயம் கடத்தி வந்த போது கடலூர் கலால் போலீசார் காரை நிறுத்தி பிரபுவை கைது செய்தனர். காரில் கடத்தி வரப்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News