செய்திகள்
மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை - குற்றாலம் மெயினருவியில் குளிக்கத்தடை
மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Courtallam
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளான தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகின்றது. இன்று காலை முதல் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமானது.
மாலை அதிகளவில் தண்ணீர் கொட்டியதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீசார் குளிக்க தடை விதித்தனர். இதனால், அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து மற்ற அருவிகளுக்கு சென்றனர்.