செய்திகள்

கடலூரில் புதுப்பெண் மாயம்

Published On 2018-06-07 22:00 IST   |   Update On 2018-06-07 23:11:00 IST
கடலூரில் புதுப்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் புதுப்பெண் தேடி வருகிறார்கள்.

கடலூர்:

கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மெர்சி (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மெர்சி கணவரை பிரித்து அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று மாலை வெளியில் சென்று வருவதாக தந்தை செல்வத்திடம் கூறிவிட்டு மெர்சி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் கவலை அடைந்த செல்வம், மகளை பல இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.

இதனை தொடர்ந்து அவர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் மெர்சியை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News