செய்திகள்

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டார் டிஜிபி - 72 போலீசார் காயமடைந்ததாக தகவல்

Published On 2018-06-07 06:41 GMT   |   Update On 2018-06-07 06:51 GMT
தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் 72 போலீசார் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து, பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  கலவரத்தின்போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.



ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை தூண்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தின்போது 72 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ThoothukudiFiring #DGPReport
Tags:    

Similar News