செய்திகள்

எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?- ஜவாஹிருல்லா கேள்வி

Published On 2018-06-05 07:29 GMT   |   Update On 2018-06-05 07:29 GMT
பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மாமல்லபுரம்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கல்ப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்சு வேன் வழங்கும் நிகழ்ச்சி கல்ப்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையை விமர்சித்த பெண்ணை காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் உடனடியாக கைது செய்துள்ளனர்.

ஆனால் பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? அவர் மைலாப்பூர் பகுதி கடைகளுக்கு துணிச்சலாக போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று வருவது போலீசுக்கு தெரியவில்லையா?.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News