செய்திகள்

செந்துறை அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் கைது

Published On 2018-06-04 13:53 GMT   |   Update On 2018-06-04 13:53 GMT
செந்துறை அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் வசந்தகுமார் வயது 19. இவர் உடையார் பாளையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வருகிறார். 

இவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக செந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் அதிகாலையில் வசந்தகுமார் வீட்டை ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் பின்புறம் இரண்டு கஞ்சா செடிகள் இருப்பதை கண்டு பிடித்தார். 

அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மோகன் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் வசந்தகுமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Tags:    

Similar News