செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-06-04 10:40 GMT   |   Update On 2018-06-04 10:40 GMT
கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேலமங்களம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை கோயம்பேட்டில் ரிக்க்ஷா ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெயலலிதா(வயது 25). இவர்களுக்கு கவுதமன்(3½) என்ற மகனும், பூமிகா(1) என்ற மகளும் உள்ளனர்.

ஜெயலலிதா தனது குழந்தைகளுடன் மேலமங்களத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மேலமங்களத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கி விட்டார். இதனால் கணவன்-மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவதன்று விக்னேசை வேலைக்கு செல்லும்படி ஜெயலலிதா கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதனால் அவர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு வந்த விக்னேஷின் உறவினர்களும் ஜெயலலிதாவை திட்டினர்.

இதனால் மனம் உடைந்த ஜெயலலிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ அவர் உடல் முழுவதும் பற்றி எரிந்தது. ஜெயலலிதா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று தீயை அணைத்து அவரை மீட்டனர். இதில் ஜெயலலிதாவிற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

பின்னர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ஜெயலலிதா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News