செய்திகள்
பலியான புள்ளிமான்.

மாதவரத்தில் வாகனம் மோதி புள்ளிமான் பலி

Published On 2018-06-04 10:08 GMT   |   Update On 2018-06-04 10:08 GMT
மாதவரம் ரவுண்டானா பகுதியில் இன்று காலை வாகனம் மோதியதில் புள்ளி மான் பலியானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாதவரம்:

மாதவரம் ரவுண்டானா பகுதியில் இன்று அதிகாலை புள்ளிமான் ஒன்று தாவிக்குதித்து ஓடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மானை பிடிக்க முயன்றனர். ஆனால் அது தப்பி ஓடி விட்டது.

இந்த நிலையில் காலை 7 மணியளவில் அப்பகுதியில் சாலை ஓரத்தில் பலத்த காயங்களுடன் அந்த புள்ளி மான் உயிருக்கு போராடிய படி கிடந்தது. அதனை பொதுமக்கள் மீட்டு மாதவரம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது புள்ளிமான் இறந்துவிட்டது.

சாலையை கடந்து ஓடியபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் பலத்த காயம் அடைந்து இறந்து உள்ளது.

மாதவரம் பகுதியில் புள்ளிமான் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. எனவே விலங்குகளை கடத்தும் கும்பல் இந்த புள்ளி மானை ஆந்திரா வனப்பகுதி அல்லது பூண்டி வனப்பகுதியில் இருந்து வாகனத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

வாகனத்தில் இருந்து புள்ளிமான் தாவிக்குதித்து தப்பி ஓடியபோது விபத்தில் சிக்கி இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

பலியான மானின் உடலை வேளச்சேரி வனத்துறையினர் கைப்பற்றினர். மானை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோல் 2 புள்ளி மான்கள் வாகனம் மோதி இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News