செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2018-05-31 14:53 GMT   |   Update On 2018-05-31 14:53 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவெண்ணைநல்லூர்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி தங்கபொன்னு (வயது 65). இவர் வீட்டில் வைத்து திடீரென வி‌ஷம் குடித்தார். 

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் தங்கபொன்னு பரிதாபமாக இறந்தார். 

இதுப்பற்றி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தங்கபொன்னுக்கு தீராத வயிற்று வலி இருந்தது. இதனால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
Tags:    

Similar News