செய்திகள்

குத்தாலம் அருகே 10-ம் வகுப்பு மாணவனை கடத்தி சென்ற கும்பல்

Published On 2018-05-31 12:23 GMT   |   Update On 2018-05-31 12:23 GMT
குத்தாலம் அருகே டியூசன் முடிந்து வந்த 10-ம் வகுப்பு மாணவனை கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குத்தாலம்:

குத்தாலம் அருகே உள்ள பெரிய செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 45). கொத்தனார். இவரது மனைவி புவனேஷ்வரி (36). இவர்களுடைய மகன் அபினேஷ்வரன் (14). பேரளந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் நேற்று அபினேஷ்வரன் பள்ளிக்கு டியூசன் சென்றுள்ளான். பின்னர் டியூசன் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேரளந்தூர் பகுதியில் உள்ள கோமல் ரோட்டில் பஸ்சிற்காக காத்திருந்துள்ளான். இதை நோட்டம் விட்டு கொண்டிருந்த 2 நபர்கள் புவனேஷ்வசனிடம் பேச்சு கொடுத்து நாங்கள் உன்னை வீட்டில் விட்டு விடுகிறோம் என்று கூறி அபினேஷ்வரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி உள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி அபினேஷ்வரனும் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளான்.

உடனே 2 நபர்களும் அவன் வாயை மூடி மயிலாடுதுறை அருகே கொண்டு சென்றுள்ளனர். இதையறிந்த அபினேஷ்வரன் வாயை மூடிய நபர் கையை கடித்து அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளான். அவர்கள் இருவரும் அபினேஷ்வரனை துரத்தியுள்ளனர். பின்னர் மயிலாடுதுறை ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளான். அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபினேஷ்வரன் பதட்டமாக வருவதை பார்த்து அவனை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதைதொடர்ந்து போலீசார் அபினேஷ்வரனை மீட்டு அவனது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அலுவலர் சிவராமன் முன்னிலையில் அபினேஷ்வரனை அவனது தாய் புவனேஷ்வரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News