செய்திகள்

துப்பாக்கி சூட்டில் பலியான‌ செல்வசேகர் உடல் அழுகியதாக பரபரப்பு- உறவினர்கள் அதிர்ச்சி

Published On 2018-05-30 07:49 GMT   |   Update On 2018-05-30 07:49 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான செல்வசேகர் உடல் அழுகியதாக வெளியான தகவலால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் 7 பேரின் உடல்கள் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விட்ட‌து. மீதம் உள்ள ரஞ்சித்குமார், அந்தோணி செல்வராஜ், கிளாட்சன், மணிராஜ், ஜான்சிராணி என்ற வினிதா, ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டவர்களின் உடல்கள் கோர்ட்டு உத்தரவின்பேரில் பதப்படுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் சாயர்புரத்தை அடுத்த பேய்க்குளம் செல்வசேகர் உடல் அழுகியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இந்த தகவல் செல்வசேகரின் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாக‌த்தில் திரண்டனர். ஒருவரது உடல் அழுகினால் பிரேத பதப்படுத்தப்பட்ட மற்ற உடல்களையும் பாதிக்கும் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதுபற்றிய விவரம் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiFiring
Tags:    

Similar News