செய்திகள்

மதுராந்தகம் அருகே விவசாயி அடித்து கொலை

Published On 2018-05-27 11:19 GMT   |   Update On 2018-05-27 11:19 GMT
மதுராந்தகம் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கத்தை சேர்ந்தவர் பரமேஷ் (வயது 52) விவசாயி. இன்று காலை அவர் அருகில் உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ரத்தக் காயத்துடன் பரமேஷ் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் படாளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று பரமேஷ் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரமேசை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. சமீபத்தில் பரமேஷ் யாருடனும் மோதலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விவரங்களை போலீசார் சேகரத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News