செய்திகள்

சேலையூர் அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகை கொள்ளை

Published On 2018-05-26 06:07 GMT   |   Update On 2018-05-26 06:07 GMT
சேலையூர் அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 52 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
தாம்பரம்:

சேலையூரை அடுத்த கவுரிவாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். சுற்றுலாத் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயந்தி.

நேற்று மாலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு ஆதம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். இரவில் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 52 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளிப் பொருட் கள் கொள்ளை போயிருப்பது தெரிந்தது.

சீனிவாசன் குடும்பத்துடன் வெளியில் சென்றிருப்பதை அறிந்த மர்ம கும்பல் நகை, பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News