செய்திகள்

மீட்பு பணி ஒத்திகை காரணமாக முன்பதிவு மையம் 2½ மணி நேரம் இயங்காது - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2018-05-25 03:12 GMT   |   Update On 2018-05-25 03:12 GMT
பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணி குறித்த ஒத்திகை நடைபெறுவதால் முன்பதிவு மையம் 2½ மணி நேரம் இயங்காது என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பயணிகள் முன்பதிவு அமைப்புக்கு நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணி குறித்த ஒத்திகை நடைபெறுகிறது. எனவே நாளை மதியம் 2.15 மணி முதல் 3.15 மணி வரை 1 மணி நேரமும் மற்றும் நாளை இரவு 11.45 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 1.20 மணி வரை 1 மணி நேரம் 35 நிமிடங்களும் பயணிகள் முன்பதிவு அமைப்பு செயல்படாது.



மேலும் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு மைய கவுண்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதியும், 139 சேவையும், ரெயில்வே இணையதளமும் இந்த நேரங்களில் செயல்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News