செய்திகள்
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு புகார்: செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரை திடீர் முற்றுகை
செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரை தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலரை முற்றுக்கையிட்டனர்.
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரணம், பொன்பரப்பி, மருவத்தூர், வஞ்சனபுரம், ஆலத்தியூர் உள்ளிட பல்வேறு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திலும் இன்னும் பல்வேறு திட்டங்கள் செயல்படாமல் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேனை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதில் மாவட்ட தலைவர் பரமசிவம் ஒன்றிய தலைவர் சின்னபன், கந்தசாமி, பரணம் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செழியன், அண்ணாதுரை, அருணாசலம், சபரி, பாலு உள்ளிட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.