செய்திகள்
உசிலம்பட்டி அருகே இடி தாக்கி ராணுவ வீரர் பலி
உசிலம்பட்டி அருகே நேற்று இடி- மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டை அடுத்துள்ள டி.பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 29).
ராணுவ வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை வீட்டின்மாடியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.