செய்திகள்
விஷால்

10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி- கிணற்றில் குதித்து மாணவன் தற்கொலை

Published On 2018-05-24 10:25 GMT   |   Update On 2018-05-24 10:25 GMT
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் விஷால் (வயது 15). ஆலங்காயம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தான்.

இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவன் விஷால் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தான். இதனால் மனமுடைந்த விஷால் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்காயம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News