செய்திகள்
திண்டுக்கல்லில் இடி-மின்னலுடன் மழை, மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
திண்டுக்கல்லில் இடி-மின்னலுடன் பெய்த மழையினால் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. பின்னர் இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விண்ணை பிளக்கும் வகையில் ஒலித்த இடியினால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் மழை பெய்து ஓய்ந்த பின் மின் இணப்பு மீண்டும் வந்தது. அதன்பின் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இரவுவரை இநத மழை நீடிக்கவே மின் இணைப்பு துண்டானது.
இதனால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. பலத்த சூறாவளி காற்றினால் மரங்கள், மின்சார வயர்கள் முறிந்தும், அறுந்தும் விழுந்தன. திண்டுக்கல் மட்டுமின்றி புறநகர் பகுதியிலும் கன்னிவாடி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு,, பழனி, நத்தம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் அருகே உள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராஜ் (வயது 50). இவர் நேற்றிரவு தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் மின்சார வயர் அறுந்து விழுந்தது.
இதனை கவனிக்காமல் சென்ற ஜெயராஜ் மின்சார வயர் மீது கால் வைத்ததில் தூக்கி வீசப்பட்டார் இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் நகரில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. பின்னர் இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விண்ணை பிளக்கும் வகையில் ஒலித்த இடியினால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் மழை பெய்து ஓய்ந்த பின் மின் இணப்பு மீண்டும் வந்தது. அதன்பின் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இரவுவரை இநத மழை நீடிக்கவே மின் இணைப்பு துண்டானது.
இதனால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. பலத்த சூறாவளி காற்றினால் மரங்கள், மின்சார வயர்கள் முறிந்தும், அறுந்தும் விழுந்தன. திண்டுக்கல் மட்டுமின்றி புறநகர் பகுதியிலும் கன்னிவாடி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு,, பழனி, நத்தம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் அருகே உள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராஜ் (வயது 50). இவர் நேற்றிரவு தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் மின்சார வயர் அறுந்து விழுந்தது.
இதனை கவனிக்காமல் சென்ற ஜெயராஜ் மின்சார வயர் மீது கால் வைத்ததில் தூக்கி வீசப்பட்டார் இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.