செய்திகள்

திருவையாறு அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு

Published On 2018-05-23 17:30 IST   |   Update On 2018-05-23 17:30:00 IST
திருவையாறு அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவையாறு:

திருவையாறு அடுத்த அரசகுடியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அந்த ஊரில் உள்ள குடிநீர் குழாயை உடைத்துவிட்டதாக அதே ஊரைசேர்ந்த தமிழ்செல்வன், கருப்புசாமி, மற்றும் பலர் தட்டிகேட்டுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று பால் ராஜ் தரப்பினரும், தமிழ்ச் செல்வன் தரப்பினரும் இதுதொடர்பாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கருப்புசாமிக்கும், மணிகண்டனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது சம்மந்தமாக பால்ராஜ் மருமகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் தமிழ்ச்செல்வன் சுந்தர பாண்டியன், கரிகாலன், முத்தமிழ் செல்வன், கருப்புசாமி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தும், கருப்புசாமி(57) கொடுத்த புகாரின்பேரில் ஆவிக்கரையை சேர்ந்த மணிகண்டன், அரசகுடியை சேர்ந்த அஜித்குமார் பால்ராஜ், தேவேந்திரன், சவுந்தர்ராஜன் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News